Jun 16, 2023

 

பிற்போக்குவாதிகளின் சாதித்துவமும் தமிழர்களின் மடமைத்தனமும்

By Engr. Kanthar Balanathan

DipEE (UK), GradCert (RelEng-Monash), DipBus&Adm (Finance-Massey), C.Eng., MIEE, 

Former Director of Power Engineering Solutions Pty Ltd, Consulting Electrical Engineers

Leading Engineer of the World 2006, UK, Authority Award

 

1.        சாதித்துவம்

 யாழில் உயர்ந்த சாதி யார்?. சரித்திரத்தில் ஆரியர் என்கின்றோம். பிராமணரை ஆரியன் சாதியில் குறைத்துவிட்டான். எப்படி? ஆலயத்தில் பூஜை பண்ண வைத்து தட்டேந்தி பிழைக்கவைத்துவிட்டான். ஆனால் பிராமணர் நீதி, நேர்மை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவைகளில் மேன்மையானவர்கள். ஆரியன் ஆட்சியை கையில் எடுத்து யார் என்ன செய்ய வேண்டுமென்று கட்டளை இட்டான்.  எப்படியும் பிராமணரில் சுத்த, அழுக்கற்ற வாழ்க்கை மேன்மை ஓங்கியது. பிராமணர்கள்தான் மனித இனத்தில்  உயர்ந்தவர்கள். அதனால், மற்றவர்கள் பிரமணர்களுக்கோ ஆரியனுக்கோ அடிமை இல்லை. இவை எல்லாம், எதற்கு, பதவி மோகம் அதிகாரம், இவை தேவை அல்லவா?

 

2.        சாதிப்பிரிவுகள்

 

வேளாளர்: யார் இவர்கள்? விவசாயம் செய்பவர்களா? அல்லது காணிகளை அபகரிப்பவர்களா? சரித்திரத்தில் ஜமீந்தார் அன்று ஒருவகை சோம்பேறிகள் வாழ்ந்தார்கள். இவர்கள் கொலை செய்து பதவியையும் காணிகளையும் கைப்பற்றினார்கள். அதிகாரத்தையும், பாழாய்போன பதவிகளையும் வைத்து மக்களை ஏமாற்றி ஒடுக்கி வைத்து வாழ வைத்தார்கள்.

 

3.       தொழில் நுட்ப வல்லுனர்கள்.

 

விவசாயிகள்: இவர்கள் அரிசி சாகுபடி செய்ய விவசாயம் செய்பவர்கள். ஆனால், இவர்களால், ஆழ் கடலில் போய் மீன் பிடித்து வந்து மக்களுக்கு உண்ண கொடுப்பார்களா? இல்லை. முடியாது. ஏன்? தொழல் நுட்பம்; கப்பல், தோணி, படகு வழி செல்ல இவர்களால் முடியாது. ஏன்? இவை ஒரு தொழில் நுட்பம். கப்பல் ஓட்டு வல்லுனர்களால் மட்டும்தான் கப்பலை வழி செல்ல முடியும். அப்படி என்றால், மீனவர்கள் எந்த கோட்பாட்டில்  விவசாயிகளை விட சாதியில் குறைந்தவர்கள்? அதே வேளையில் ஒரு மீனவனால் உழ முடியும், விவசாயம் செய்து அரிசி சாகுபடி செய்ய முடியும். அப்படி என்றால், எந்த தொழில் நுட்ப வல்லுனர்கள் சிறந்தவர்கள்?

 

ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு தொழில் செய்யும் மக்களை தொழில் நுட்ப வல்லுணர்களாகத்தான் பார்கின்றார்கள்.

 

உதாரணம்: குடிக்கும் கள்ளு: இதை மற்றைய தொழில் நுட்ப வல்லுணர்களால் உற்பத்தி செய்ய முடியுமா? ஆனால், உறிஞ்சி பிளாவில் குடிக்கத்தான் முடியும்.

 

ஒரு இயந்திரத்தை கூட்டி நிறுவ எத்தனையோ பாகங்கள் தேவை. ஒரு மனிதனின் மூளையில் எத்தனையோ நரம்பியல் நியுரான்கள் உண்டு. இதில் எந்த நியுரோன் பெரிது சின்னது என்று கூறமுடியுமா? எல்லாம் சேர்ந்துதான் மனிதனை இயக்குகின்றது. அதோடு கை பெரிதா, கால் பெரிதா, என்று கூற முடியுமா?

 

காலம் சென்ற ஜனாதிபதி அப்துல் கலாம், ஒரு மீனவ குடும்பத்தில் பிறந்தவர். அணு சக்தி விஞ்ஞானத்தில் பெயர் பெற்ற ஒரு விஞ்ஞானி. இவர் சாதியில் குறைந்தவரா?

 

என் பார்வையில் வேளாளர் சோம்பேறிகள். தொழில் நுட்பம் என்ன என்று தெரியாதவர்கள். பணத்தை வைத்து, தாங்கள் பெரியவர்கள் என்று அலட்டி கொள்வார்கள்.

 

உதாரணம்: ஐங்கரநேசனின் பேட்டியில் கூறினார். நீதிபதி விக்னேஸ்வரன் கேட்டாராம், ஐங்கரநேசன் நீர் என்ன சாதி என்று. பின்பு விக்னேஸ்வரன் கூறினாராம்: நீர் வெள்ளாளன் என்று கூறாதபடியால் நீர் வெள்ளாளன் இல்லை என்று. இது ஒரு வெட்கக்கேடான விடயம். ஏன், ஒரு நீதிபதி, கடந்த வட மாகான சபையில் முதல் மந்திரியாக இருந்தவர். இவர் எப்படி சட்டத்தையும், மனித நேயத்தையும் கடைப்பிடிப்பார். ஐங்கரநேசன் கூ றியபடி விக்னேஸ்வரன் உள்ளுர் ஆட்சி மன்றத்திலும் இனி கேட்டு வெல்ல முடியாது. இனி மேல் அவர் வீடு செல்ல வேண்டியதுதான். விக்னேஸ்வரன் ஒரு அரசியல் இடத்திலும் உட்கார தகுதி அற்றவர்.

 

விக்னேஸ்வரனுக்கு அணு பிளவு, அணு இணைவு இவற்றிற்கு அர்த்தம் தெரியுமா? எதற்கு சூரியனில் அணு இணைவு என்பது உண்மை? இவர் என்ன வேகத்தில் சூரியனின் சுற்றுப்பாதை வேகத்தில் சுற்றி வருகின்றார். ஜனாதிபஹி அப்துல் கலாமுக்கு இதன் அர்த்தங்கள் தண்ணி பட்ட பாடு. அப்படி என்றால் அப்துல் கலாம் பெரிதா, அல்லது இந்த சோம்பேறி விக்னேஸ்வரன் பெரிதா?

 

நான் இன்று வரை (16th June 2023) 75.17 trillion kilometers சூரிய பாதையை (orbit) சுற்றி வந்திருக்கின்றேன்.எனது வயதை இவரால் கணிக்க முடியுமா? நான் பெரிதா? அல்லது விக்னேஸ்வரன் பெரிதா? விக்னேஸ்வரன் ஒரு சோம்பேறி, நுண்ணறிவு அற்றவர். எனக்கு சட்டமும்  தெரியும், தொழில் நுட்பமும் தெரியும்..         

 

சாதி பெரிதல்ல: அறிவு, நுண்ணறிவு, யதார்த்தத்தின் உணர்தல்,அறிவுசார் மேன்மை, தொழில்முறை திறன், இவைதான்  பெரிது.

 

யாழ் தமிழர்கள் முட்டாள்கள். சாதித்துவத்தை பயன் படுத்தி மக்களை ஒடுக்கி வாழ்கின்றார்கள். இதனால்தான் இவர்களுக்கு போலீஸ் அதிகாரம் வேண்டுமென்கின்றார்கள்.

 

ஆலயத்தில் பெரிய கோபுரம் கட்டினால் தாங்கள் பெரிது?? உண்ண உணவு தேவை இல்லையா?

 

சாதியைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் தொழில் நுட்ப வேலையை பார்த்து முன்னேரப்பாருங்கள் மூடர்களே.

 

16th June 2023

  

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

  12-04-2024 Engr. Kanthar Balanathan DipEE (UK), GradCert (RelEng-Monash), DipBus&Adm (Finance-Massey), C.Eng., MIEE, Former Dire...