Jan 15, 2023

 ஒட்டுக்குழுக்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும், கொலைகாரகும்பலுக்கும், போராளிக் கூட்டத்திற்கும்  2023 பொங்கல் தின வேண்டுகோள்


தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று கடந்த பதின்னாலு வருடங்களாக எதைக் கிழித்தீர்கள். புலிகள் என்று தொடங்கி மக்களை அழித்து, தொழிற்சாலைகளையும் அழித்து, மக்களிடம் தங்கம் கொள்ளை அடித்து, அதை புதைத்து வைத்து, கொடபயவிடம் கொடுத்து, கண்டது என்ன? கொலைகாரர்களுக்கு அரசியல் தெரியுமா?

அரசியல் என்பது மனித வாழ்க்கையில் ஒரு கொள்கை/தத்துவம் என்று கூறுகின்றார் வழக்கறிஜர் சிபி சரவணன். அரசியல் என்பது  சமுதாய வாழ்க்கைக்கு அமைதியை தருவது. எல்லாவற்றிற்கும் அரசியலே வழிவகுக்கின்றது. முட்டாள்கள், பயங்கரவாதிகள், கொலைகாரர்கள் அரசியலுக்கு வரவே கூடாது. இனம் அழிந்துவிடும்.

தமிழ் அரசியல்வாதிகள் (பயங்கரவாதிகள்) முட்டாள்கள். அவர்களுக்கு தொலை நோக்கு பார்வை இல்லை. மூலோபாய திட்டமிடல், தந்திரோபாய திட்டமிடல், இவை பூச்சியம்.

இன்று, கொலைகார கும்பலும், போராளிக்கும்பலும் சேர்ந்து பழைய படி தமிழ் அரசியலுக்கு வருவதாக கூறி குழப்பி விட்டிருக்கின்றார்கள். ஒன்று மாத்திரம் மனதில் வையுங்கள்: பயங்கரவாதிகள், கொலைகாரர்கள் அரசியலில் இருக்கும்வரை தமிழர் பிரச்சனை தீரவே தீராது. தமிழ் இலங்கையிலிருந்து அழியும். முட்டாள்களும் கள்ளத்தோணி எடுத்து புலம் பெயர்ந்து வெளி நாட்டில் கூலி  வேலை செய்து அழிவார்கள். வாள் வெட்டி கொலை செய்யும் ஆவா கும்பலை என்ன செய்வதாக எண்ணம்.

இப்போ அரசியலில் இருக்கும் போராளிகளும், கொலைகாரர்களும் அரசியலை விட்டு, ஒதுங்கி விவசாயம் செய்யலாம், கடல் தொழில், சவரம், மரவேலை, கூலி வேலை செய்து பிழைக்கலாம். வட மாகாணத்தை வளர்ச்சி பெற செய்யலாம். முட்டாள் சோம்பேறிகள் தான் அரசாங்க பணத்தில் ஊறி பிழைக்க யோசிப்பார்கள்.

ஆமாம், இந்த கொலைகார கும்பலின் தொலை நோக்கி பார்வை என்னவென்று கேட்டால் தமிழ் மக்களுக்கு என்ன கூறுவீர்கள்.

அனந்தி சசிதரன் சிறப்பு அம்சம் என்ன? இதுவரை என்னத்தை சாதித்தார்? சித்தார்த்தன் என்ன சாதித்தார்?

Quote: “மடைத் தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு” என்பது ஔவையாரின் மூதுரை, எல்லோரும் அறிந்ததே. இதை அறிந்து எத்தனை போராளி அரசியல்வாதிகள் காத்து இருக்கின்றார்கள். சித்தார்த்தன் ஒன்று, இப்படி பலபேர். அடைக்கலம் செல்வநாதன் படிப்பு என்ன? தமிழ் அரசியலே ஒரு கேவலமான கேள்விக்குறி.

புது வருட வேண்டுகோள்: இனிமேலும் மக்களை ஏமாற்றாமல் தயவு செய்து ஒதுங்குங்கள்.

மக்கள் செய்யும் ஒன்னொரு முட்டாள் வேலை. ஆனல்டை மேயராக்க முயற்சிக்கின்றார்கள். இப்படித்தான் தமிழரின் முட்டாள் வேலைகள்.

மூளை என்று ஒன்று இருந்தால் தயவு செய்து சிந்தியுங்கள்.

கொலைகாரர்கள், தயவு செய்து ஒதுங்குங்கள்.

தமிழன்.

பொங்கல் தினம். 15-1-2023

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

  04-04-2025 Engr. Kanthar Balanathan DipEE (UK), GradCert (RelEng-Monash), DipBus&Adm (Finance-Massey)  Former Director of Power ...