Oct 1, 2024

 சி வி விக்னேஸ்வரன் அவர்கட்கு,

உனக்கு என்பத்திஐந்து வயது. எனக்கு என்பத்தி ஒரு வயது. எனது வாழ்க்கையில் நான் தமிழ் மக்களுக்காக இவ்வளவு காலம் எவ்வளவோ தியாகங்களை செய்திருக்கின்றேன். ஒரு சில உண்மைகளை தற்காலிகமாக கூறுகின்றேன். இதுவரை காலமும் மக்களுக்கு கூறாததின் காரணம் எனக்கு உயர் அச்சுறுத்தல். இனி பயமில்லை.  ஏன்? நான் இன்னும் எவ்வளவு காலம் உயர் வாழ்வனோ தெரியவில்லை. சாதி வெறி பிடித்த இந்த தமிழ் மக்களிடையே என்ன வாழ்க்கை. உமக்கு முன்னரே எனது உண்மையை ஏழுதி இருக்கின்றேன். மாகாண சபையை உருவாக்குவதற்கு எண்பத்தி ஆறில் ஜிம்பாப்வேயில் கஷ்டப்பட்டு பிரச்சாரம் செய்ததில் ராஜீவ் காந்தி இலங்கையில் மாகாண சபையை ஸ்தாபித்தார். ஆனாலோ நீ மாகான சபைக்கு வந்த பணங்களை திருப்பி அனுயுப்பினாய். எனது முழு உண்மைகளை கூறுவதற்கு இது நேரமல்ல. புலிகளின் பிரபாகரனை என்பத்தி மூன்றிலேயே சந்தித்தேன். அன்டன் பாலசிங்கம் எனது நண்பர். தமிழ் அரசியல்வாதிகள் என்னத்தை இத்தனை காலம் கிழித்தார்கள். மாகாண சபைக்கு வந்த எல்லோரும் ஊழல்வாதிகள்.

இன்று என்ன கேள்வி? விக்னேஸ்வரன் ஒரு தாய் தந்தை இல்லா பெண்ணுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் ரணிலிடன் வாங்கி கொடுத்தாயாம். சீ வெட்கக்கேடு. இந்தப்பெண்ணுக்கு நீர் அனுமதி எடுத்துக் கொடுக்கக் காரணம்? என்ன உறவு? ஒரு நேர உணவு உண்ண கஷ்டத்தை அனுபவிக்கும் மக்களிடையே மதுபானம் தேவையா? உன்னை நல்லவன் என்று மக்களுக்கு முன்பு எழுதி இருக்கின்றேன். இதற்காக நான் வெட்கப்படுகின்றேன். உன்னோடு சேர்ந்திருக்கும் எல்லா அரசியல்வாதிகளும் பயனற்றவர்கள். சுயநலம் பிடித்தவர்கள். ரணில் ஒரு தந்திரவாதி, நரி.

தமிழ் மக்களுக்கு விடிவு காலம் எப்போ? கிழட்டு ஊழல் அரசியல்வாதிகள் வீடு போகவேண்டும். யாழ் சர்வகலாசாலையில் இருந்து லஞ்ச, ஊழல் அற்ற பட்டதாரிகளில் சிலர் முன் வந்து  அரசியலை ஏற்க வேண்டும்.

அநுரா இதுவரையில் ஒரு நாள் முதல்வரை போல அதிரடி வேலைகள செய்கின்றார். நல்ல சகுனம். உனக்கு இனி அரசியல் வேண்டாம். உன்னோடு சேர்ந்தவைர்களுக்கும் அரசியல் வேண்டாம். நெற்றியில் பட்டை அடித்து வந்ததும் அன்று சிந்தித்தேன்.

உண்மைகளை வெளியே கொண்டுவந்த தமிழ் அடியானுக்கு எனது நன்றி.

தமிழ் மக்களே! பெரிய சாதி என்று கூறிக்கொண்டு அரசியல் செய்பவர்களை நம்பாதீர். இவர்கள் முக்குலத்தோர்.

நன்றி.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Question directed to Chandrika Bandaranaike   Dear former President of SriLanka. I have a couple of questions to be directed to you sinc...